நான் கடவுள் (விமர்சனம்) - வித்யா
First Published : Monday , 9th February 2009 11:29:20 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM
Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/Ilakkyam_details.php on line 303
வழக்கமான பாலா படம். ஒரு வித மூர்க்கத்தனத்துடன் இருக்கும் ஹீரோ. மூன்று வருட உழைப்பினைக் கொட்டி வெளிவந்திருக்கும் படம். சிறு வயதிலேயெ காசியில் கொண்டு வந்து விடப்பட்ட சிறுவன் அகோரியாக வளர்ந்து நிற்கிறான். தன்னைத் தேடி வரும் குடும்பத்தினரிடம் இருக்கும் உறவை அறுத்தெறிந்துவிட்டு வர சொல்கிறார் அவன் குரு. ஊரில் ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலின் கதையும் ருத்ரனையும் வைத்து மிச்சக் கதையை பின்னியிருக்கிறார் பாலா. ரொம்பவே வித்தியாசமான துணிச்சலான முயற்சி பாலாவிடமிருந்து. எல்லோரும் சொல்வது போல் குப்பைகளுக்கு மத்தியில் மாணிக்கத்தைக் கண்டெடுக்க பாலா மேற்கொண்டுள்ள முற்சியைப் பாராட்டவாவது படத்தை தியேட்டரில் பார்க்கலாம். மற்றபடி அனைவரின் உழைப்பும் வீணாகத்தான் போயிருக்கிறது.
ஊனமுற்றவார்களின் அவலத்தையே திரும்ப திரும்ப காமிப்பதால் ஒரு வித சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆர்யா பாடி லேங்குவேஜில் பின்னியிருக்கிறார். மத யானையினைப் போல் சினங்கொண்டு அலைகிறார். படத்திலேயே ஆர்யாவிற்க்கு அப்புறம் என்னை கவர்ந்த பாத்திரம் பிச்சைக்காரர்களை மேய்க்கும் முருகன் பாத்திரம் தான். கிளாஸான நடிப்பு. கதையை எப்படிக் கொண்டுபோவது என பாலா ரொம்பவே தடுமாறுகிறார். அந்த மொட்டைத் தலை வில்லன் பேசும் வசனம் பாதிக்கு மேல் புரியவில்லை. அம்சவள்ளியாக வரும் பூஜா ஒரளவுக்கு நடித்திருந்தாலும் நிறைய இடங்களில் அவர் செய்யும் பிரசாரம் எரிச்சல் பட வைக்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியின் வசனம் ஹீம் அம்சவள்ளி இம்சைவள்ளியாகிறார். படத்தில் வரும் அந்த நீதிமன்ற காட்சியும், அந்த ஊனமுற்ற சிறுவன் பேசும் வசனங்களும் தான் அதிகம் கைத்தட்டலைப் பெற்றது.
மிகுந்த சிரமத்திற்கிடையே வித்தியாசமான படங்களை எடுப்பதன் மூலம் தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்யவைக்க முயலும் பாலாவின் ஒரே மனதைரியத்தைப் பாராட்டி இந்தப் படத்தை பார்க்கலாம். அதே சமயம் பாலாவும் ஒரே மாதிரியான கதையைப் (இதில் ஷங்கரை மிஞ்ச ஆள் கிடையாது) பண்ணுவதிலிருந்து கொஞ்சம் வெளிவரணும்.
நான் கடவுள் - (படத்தைப் பார்த்த) நான் கடவுள்:)
இவரது மற்ற பதிவுகளைக் காண :Scribblings